உடல் சிதைந்த நிலையில் முதியவர் பிணம்

உடல் சிதைந்த நிலையில் முதியவர் பிணம் மீட்கப்பட்டது.

Update: 2023-07-01 19:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் பிலவேந்திரன் (வயது 70). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கரை வளைந்தான்பட்டி அருகே உள்ள வயலில் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் பவுல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிலவேந்திரனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? யாரேனும் கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்