கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-06 17:14 GMT

புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாப்பிள்ளையார்குளம் பகுதியில் சந்தேகப்படும் படி நின்ற செல்வக்குமார் என்கிற சூர்யாவை (வயது 22) பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். மேலும் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 1 செல்போன் மற்றும் ரூ.1,000-த்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்