வாலிபர் தற்கொலை

நெல்லை மேலப்பாளையத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-29 19:53 GMT

மேலப்பாளையம் சிவராஜபுரம் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் சேர்மதுரை (வயது 32). தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தருவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதற்காக சேர்மதுரை தருவைக்கு சென்றார். ஆனால் மனைவி குடும்பம் நடத்த வரமறுத்து விட்டார். இதனால் மனம் உடைந்த சேர்மதுரை விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சேர்மதுரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்