தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Update: 2023-07-20 19:00 GMT

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் பிரபாகரன் (வயது 36). இவருடைய மனைவி அஞ்சுதா (29). இவர் திருப்பத்தூரில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு நோய் ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தாலும் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்