மருத்துவத்துறை ஊழியர்கள் திடீர் சாலை மறியல்

மருத்துவத்துறை ஊழியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-15 18:32 GMT

புதுக்கோட்டையில் பழைய அரசு மருத்துவமனை முன்பு நேற்று மருத்துவத்துறை ஊழியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசு மருத்துவ பணியாளர்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ஈவு தொகை சரியாக வழங்கப்படவில்லை எனவும், இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மறியலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்