13-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-17 18:45 GMT

ராயக்கோட்டை

சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி மற்றும் நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க 3,500 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உத்தனப்பள்ளியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நேற்று 13- வது நாளாக உத்தனப்பள்ளியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்