உத்தனப்பள்ளியில் 3-வது நாளாக விவசாயிகள் போராட்டம்

சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளியில் 3-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-28 18:45 GMT

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய 3 ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலத்தை 5-வது சிப்காட் அமைக்க அரசு கையகப்படுத்தி வருகிறது. விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் உத்தனப்பள்ளியில் கடந்த 26-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்