பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

Update: 2022-08-26 19:51 GMT

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா, குடியரசு தின விழாவினை முன்னிட்டு பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி நேற்று 15 முதல் 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான வாலிபால், ஹேண்ட் பால், கால்பந்து, பூப்பந்தாட்டம், எறிபந்து, கோ-கோ, இறகுப்பந்து, மேஜைப்பந்து, கபடி ஆகிய போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியினை பெரம்பலூர் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த பள்ளி மாணவிகள் அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மேலும் முதலிடம் பிடித்த அணிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கபடி போட்டியில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், கால்பந்து போட்டியில் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், பூப்பந்து போட்டியில் தொண்டமாந்துறை அரசு உயர்நிலைப்பள்ளியும், கோ-கோ போட்டியில் எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பிடித்தன. மேலும் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான 14 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இறகுப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகளை தவிர மேற்கண்ட போட்டிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இதே போல் குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான வளையப்பந்து, கேரம், கபடி, கோ-கோ ஆகிய போட்டிகள் வரிசைப்பட்டி சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்