பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

வைகாசி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update:2023-05-15 22:52 IST
பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். தமிழ்மாத பிறப்பு, கிருத்திகை, வார விடுமுறை உள்ளிட்ட நாட்களில் வழக்கத்தை விட அதிக அளவில் வருகை தருகின்றனர். அந்தவகையில் தமிழ்மாதமான வைகாசி பிறப்பையொட்டி நேற்று பழனி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அதிகாலை முதலே மலைக்கோவில், திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் வைகாசி மாதப்பிறப்பை முன்னிட்டு பழனி ஆனந்தவிநாயகருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதையடுத்து 16 அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்