நகராட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை

நகராட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-10 18:45 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட மத்திய அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக பொதுக்கழிப்பறை வழங்கப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்காமல் சிலர் ஆக்கிரமித்து கட்டண வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க.வினர் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட பொதுக் கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்காமல் ஆக்கிரமித்து கட்டண வசூல் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருமங்கலம் நகர பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்ைக எடுக்காவிட்டால் பா.ஜ.க. சார்பில் திருமங்கலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்