சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

Update: 2023-08-28 20:44 GMT


மதுரை மாவட்டம் மேலூர் பாப்பான்குளப்பட்டியைச் சேர்ந்தவர் சிவபாலன் என்ற ஜெயபால் (வயது 33). கடந்த 2020-ம் ஆண்டில் இவர், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது சம்பந்தமான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாலனை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. சிவபாலன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் நீதிபதி முத்துக்குமரவேல் நேற்று தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்