மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு 17-ந்தேதி நடக்கிறது.

Update: 2023-05-09 19:34 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஜி.சந்தோஷ் காந்தி, செயலாளர் எஸ்.செல்வகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மகளிருக்கான 13 முதல் 24 வயது வரையிலான இளம் விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனைகளுக்கு வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணி அளவில் ராணிப்பேட்டை பாரி மைதானத்தில் தேர்வு நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பங்களை சங்க இணை செயலாளர் எஸ்.பாஸ்கரிடம் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பாரி மைதானத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்