கெடிலம் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-07-30 18:45 GMT

கடலூர்

10-ம் வகுப்பு மாணவன்

கடலூர் கோண்டூர் மாசிலாமணிநகர் ஆற்றங்கரை வீதியை சேர்ந்தவர் முருகையன் மகன் விஷ்வா (வயது 16). இவர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற விஷ்வாவை காணவில்லை. இதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை கோண்டூர் ரெயின்போ நகர் அருகே உள்ள கெடிலம் ஆற்றில் விஷ்வா பிணமாக மிதந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டு பின்புறம் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இறங்கிய விஷ்வா கால் தவறி ஆற்றில் விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. பின்னர் இறந்த விஷ்வாவின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்