2 பெண்களிடம் 7 பவுன் நகை பறிப்பு

2 பெண்களிடம் 7 பவுன் நகை பறிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Update: 2022-05-20 18:53 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே உள்ள தூம்பக்குலம் பகுதியில் அமைந்துள்ள மலையாள பகவதி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஒ.ஆலங்குளத்தை சேர்ந்த முருகேசன் மனைவி வெயிலாளி (வயது 51) என்பவ ரிடம் 4 பவுன் நகை, ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜாத்தி (60) என்பவரிடம் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடக் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்