ராமேஸ்வரம் கோவிலில் ஒ. பன்னீர்செல்வம் குடும்பத்துடன் சாமி தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-09-18 02:36 GMT

ராமேஸ்வரம்:

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக உள்ளது ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில். இன்று காலை குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் ராமநாதசாமி கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் ஒ. பன்னீர்செல்வம் நீராடினார்.

 

தொடர்ந்து கோவிலின் திட்டக்குடி அருகே உள்ள மடம் ஒன்றில் வைத்து சிறப்பு யாக பூஜை செய்கின்றார். பின்னர் இன்று மாலை கோவிலில் தரிசனம் செய்ய வருகை தர உள்ளார். கோவிலுக்கு வருகை தந்துள்ள ஓ பன்னீர் செல்வத்தை ஏராளமான பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து பேசி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்