விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

விஜயகாந்தின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்

Update: 2022-06-23 04:01 GMT

சென்னை,

நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார்.விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம். சமீபத்தில் விஜயகாந்த் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார்.

மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்..விஜயகாந்த்துக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறித்துள்ளார்.விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பிரதமர் மோடி வாழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்