சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

Update: 2023-04-03 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சிறுநாகலூர் யோகநாயகி உடனுறை ஆத்மநாதசுவாமி கோவில், எறஞ்சி காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில், வடபூண்டி கனகாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில், வடதொரசலூர் பெரியநாயகி உடனுறை பழமலை நாதர் கோவில், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், குடியநல்லூர் கைலாசநாதர் கோவில், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில், கனங்கூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்