மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அபிராமம், பெருநாழி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-12 18:29 GMT

கமுதி, 

அபிராமம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அபிராமம், நத்தம், அகத்தார் இருப்பு, அச்சங்குளம், மேலகொடுமலூர், கீழகொடுமலூர், செய்யாமங்கலம். வங்காருபுரம், தரக்குடி, வல்லகுளம், டி.புனவாசல் ஆகிய கிராமங்களுக்கு மின்வினியோகம் இருக்காது. இதேபோல பெருநாழி மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்றுகாலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை பெருநாழி, திம்மநாதபுரம், வி.எம்.பட்டி, பம்மனேந்தல், எம்.சி.புரம், பொந்தம்புளி, துத்திநத்தம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை கமுதி மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்