அரசியல் என்பது பெருங்கடல்,விஜய் கரைசேருவாரா மூழ்கி போவாரா என்பதை பார்க்கலாம் - ஜெயக்குமார் பேட்டி

விஜய்யை எம்.ஜி.ஆர். போல சித்தரித்தால் அது அவங்களுக்கு வீழ்ச்சியாகவே முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2024-02-02 12:26 GMT

சென்னை,

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:-

நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பதை நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை. அதாவது புரட்சித் தலைவர் மாதிரி இனியாரும் பிறக்க முடியாது. அவர் தெய்வப் பிறவி. அந்த தெய்வப் பிறவி மாதிரி விஜயை சித்தரித்து விட்டார்கள்.

அவர்கள் தலைவர் மாதிரி சித்தரித்து கொள்ளட்டும் அல்லது சிவாஜி கணேசன் மாதிரி சித்தரித்து கொள்ளட்டும் அல்லது தியாகராஜ பாகவதர் மாதிரி சித்தரித்து கொள்ளட்டும் அல்லது பி.யூ. சின்னப்பா மாதிரி சித்தரித்து கொள்ளட்டும்.

அரசியல் என்பது பெருங்கடல். மிகப்பெரிய சமுத்திரம். அதில் நீந்தி கரை சேருபவர்களும் இருப்பார்கள். மூழ்கியும் போவார்கள். விஜய் கரைசேருவாரா மூழ்கி போவாரா என்பதை பார்க்கலாம். அதை மக்களே தீர்மானிப்பார்கள்.

எங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை. அதனால் புரட்சித் தலைவர் ஆரம்பித்த கட்சி என்பது தி.மு.க.-வை எதிர்த்து தொடங்கப்பட்டது. அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். 50 ஆண்டுகள் கடந்தும் எழுச்சியாக உள்ளது. அதற்கு எம்.ஜி.ஆர். போட்ட விதை. அது இன்று ஆலமரமாக வளர்ந்து பலபேருக்கு நிழல் தந்து கொண்டிருக்கிறது. அதனால் அ.தி.மு.க.-வை எந்த இயக்கத்துடனும் ஒப்பிடமுடியாது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. நிலைத்து நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Full View


Tags:    

மேலும் செய்திகள்