பாலப்பணியை விரைந்து முடிக்கக்கோரிரெயில்வே பொது மேலாளருக்கு மனு

பாலப்பணியை விரைந்து முடிக்கக்கோரி ரெயில்வே பொது மேலாளருக்கு மனு

Update: 2023-08-02 18:45 GMT

ராமேசுவரம்

பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் ராமேசுவரத்திற்கு விரைவில் வழக்கம் போல் ரெயில் சேவைகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று ஏ.ஐ.டியூ.சி. தொழிற்சங்கம் சார்பில் ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்வேல் தலைமையில் மாவட்ட பொருளாளர் ஜீவானந்தம், மாதர் சம்மேளன மாவட்ட தலைவர் வடகொரியா உள்ளிட்ட நிர்வாகிகள் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்புவதற்காக ரெயில்வே நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர். இதைதொடர்ந்து ரெயில்வே நிலைய அதிகாரியிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்