பல்வேறு வழக்குகளுக்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் பல்வேறு வழக்குகளுக்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

Update: 2023-05-13 18:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கோாட்டில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி திலகம் தலைமையில் நடைபெற்றது. அனைத்து நீதிமன்றங்களிலும் இருந்து 5,921 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 2,286 வழக்குகள் பேசி முடிக்கப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக ரூ.5 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரத்து 903 நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்