புதுச்சேரியில் மேலும் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

Update: 2023-09-13 12:31 GMT

புதுச்சேரி ,

கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகியுள்ளது. கிட்டத்தட்ட இந்த காய்ச்சலால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

புதுச்சேரியை அடுத்த தர்மபுரி நடுத்தெருவை சேர்ந்த மீனா ரோஷினி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கனவே இன்று புதுச்சேரி குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி காயத்ரி என்பவர் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்தது புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்