மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு

ராதாபுரம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார்.

Update: 2023-08-06 18:39 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே உதயத்தூரை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 55). பஞ்சாயத்தில் குடிநீர் பம்ப் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று மதியம் அவரது வீட்டில் மின்சாரம் தடைபட்டதால் அதனை சரிசெய்வதற்காக டிரான்ஸ்பார்மரை அணைத்தார். பின்னர் மின்கம்பத்தில் ஏறி இணைப்பை சரிசெய்து கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (30) என்பவர் எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்பார்மரை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இசக்கியப்பனை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் ராதாபுரம் போலீசார் விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர். இதற்கிடையே இசக்கியப்பன் மகனுக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்