கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் 'களை' கட்டியது

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், கன்னியாகுமரி கடற்கரை ‘களை’ கட்டியது.

Update: 2023-09-24 18:45 GMT

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், கன்னியாகுமரி கடற்கரை 'களை' கட்டியது.

சுற்றுலா தலம்

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதினம் என்பதால் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் திரண்டு நின்று சூரிய உதயமான காட்சியை கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

விவேகானந்தர் மண்டபம்

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறைக்கு சென்றனர். அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

இதுபோல் கன்னியாகுமரியில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், சுற்றுச்சூழல் பூங்கா போன்ற பகுதிகளில் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் நேற்று கன்னியாகுமரி கடற்கரை 'களை' கட்டியது.

போலீசார் கண்காணிப்பு

இதையடுத்து போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் வட்டக்கோட்டைக்கு 25 நாட்களுக்கு பின்பு நேற்று உல்லாச படகு இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் வட்டக்கோட்டைக்கு உல்லாச பயணம் மேற்கொண்டனர்.

-

Tags:    

மேலும் செய்திகள்