தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி பங்களாமேட்டில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-02-21 18:45 GMT

தேனி பங்களாமேட்டில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றனர். பங்களாமேட்டில் தொடங்கிய ஊர்வலம் நேரு சிலை, பெரியகுளம் சாலை, எஸ்.பி.ஐ. திடல் வழியாக சென்று மீண்டும் பெரியகுளம் சாலை வழியாக பங்களாமேட்டில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ஆட்சிமொழி சட்ட வாரம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, வையை தமிழ்ச்சங்க நிறுவனர் இளங்குமரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்