குளச்சல் அருகே பாம்பு கடித்து மூதாட்டி சாவு

குளச்சல் அருகே பாம்பு கடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-30 18:45 GMT

குளச்சல்,

குளச்சல் அருகே பாம்பு கடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

மூதாட்டி சாவு

குளச்சல் அருகே ஆனக்குழி கண்ணன் கோட்டை பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் மனைவி மரிய தங்கம் (வயது 72). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் பின்புற கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்