பாம்பு கடித்து மூதாட்டி சாவு

அரக்கோணம் அருகே பாம்பு கடித்து மூதாட்டி இறந்தார்.

Update: 2022-07-17 15:09 GMT

அரக்கோணம் அடுத்த கிழவனம் அருகே உள்ள முத்துக்குமரன் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 60). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் காமாட்சியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்