வாகனம் மோதி முதியவர் சாவு

வாகனம் மோதி முதியவர் இறந்தார்.

Update: 2023-09-28 18:45 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சலவாதி தனியார் ஓட்டல் அருகில் சாலையின் தடுப்புகட்டையை தாண்டி 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து திண்டிவனம் வட்ட கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்