விஷ வண்டு கடித்து முதியவர் சாவு

விஷ வண்டு கடித்து முதியவர் சாவு இறந்தார்.

Update: 2023-09-30 18:45 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள தெற்குகாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகம்(வயது 72). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை விஷ வண்டு கடித்தது. சிறிது நேரத்தில் உடலில் விஷம் பரவி கார்மேகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்