கோவை ஆவின் நிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட ஆவின் நிலையங்களில் கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-06-30 17:51 GMT

கோவை,

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆர்.எஸ்.புரம், சுந்தரேசன் லேஅவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 28-ந் தேதி பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிகளவில் கசிவு ஆன நிலையில் காணப்பட்டது.

இதன் காரணமாக பல பாக்கெட்டுகள் வீணாகும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பால் முகவர்களுக்கு பொருளாதார ரீதியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் ஆவின் நிர்வாகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று ஆவின் கண்காணிப்பு அதிகாரிகள் கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்