என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-23 18:30 GMT

என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்கனி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீட்டில் அத்துமீறி சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்