நாகநாதர் கோயில் தேரோட்டம்: நாகை வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-12 01:39 GMT

நாகை,

நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம், நாகூர் நாகநாதர்கோவிலில் ஆனிமாத பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை, வீதி உலா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 12-ந்தேதி (இன்று) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்