மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் சிக்கினார்

நெல்லை டவுனில் மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் சிக்கினார்.

Update: 2022-12-26 20:34 GMT

நெல்லை டவுன் கருவேலங்குன்று தெருவை சேர்ந்தவர் இசக்கிராஜ் (வயது 18). இவருடைய மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதேபோல் கருப்பந்துறையை சேர்ந்த முருகன் (44) என்பவர் மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்து டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடியதாக மானூரை சேர்ந்த கணேசன் (39) என்பவரை கைது செய்து 2 மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்