விபத்தில் தாய், மகள் படுகாயம்

விபத்தில் தாய், மகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-02 19:10 GMT

சிவகாசி, 

சிவகாசி அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 43). இவர் சம்பவத்தன்று தனது மகள் அபிநயஸ்ரீ (13) என்பவருடன் சிவகாசியில் உள்ள முருகன்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் பாக்கியலட்சுமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தாய், மகள் இருவரும் கீழே விழுந்தனர். இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்