பால் வியாபாரி தற்கொலை

சாணார்பட்டி அருகே பால் வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-10-20 00:00 GMT

சாணார்பட்டி அருகே உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கிய ஸ்டீபன் (வயது 27). பால் வியாபாரி. இவரது மனைவி டெய்சி நிர்மலா. கடந்த சில நாட்களாக ஆரோக்கிய ஸ்டீபன் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்