போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகள் மாயம்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகள் மாயமானார்

Update: 2022-08-13 19:17 GMT

திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்துகுமாரசாமி. இவர் உறையூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் விமலாதேவி (வயது 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டைவிட்டு சென்ற விமலாதேவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் அமுதா பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்