வசந்த காலமாக அமைய வேண்டும் - ஜி.கே.வாசன் புத்தாண்டு வாழ்த்து

அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

Update: 2023-12-31 09:26 GMT

சென்னை,

தமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்பி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

" 2024 ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும். அனைவரது வாழ்க்கையில் இன்பம் பெருகவும், துன்பங்கள் நீங்கவும் புத்தொளி பிறக்கட்டும். தமாகா சார்பில் நாட்டு மக்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு வாழ்த்துகள்"  என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்