மாதேஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா

தேன்கனிக்கோட்டை அருகே மாதேஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது.

Update: 2023-02-19 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே அகலகோட்டை ஊராட்சி கல்பாளம் கிராமத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் சிவராத்திரியையொட்டி தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி அமர்த்தி சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் தேரோட்டம் நடந்தது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் கரகோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெரிய தேர், சிறிய தேர் என 2 தேர்களும் கோவிலை சுற்றி இழுத்து வந்து நிலை நிறுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் பானகம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்