உப்புக்கோட்டையில் கிணற்றில் ஆண் பிணம்

உப்புக்கோட்டையில் கிணற்றில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2023-06-17 21:00 GMT

உப்புக்கோட்டையில், வரதராஜபெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், வீரபாண்டி போலீசார் மற்றும் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அப்போது கிணற்றில் மிதந்த ஆண் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்