சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-01-06 18:50 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், கரூர் தாந்தோணி ஒன்றியம் , கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி 4-ம் வகுப்பு மாணவி பூமிதா 10 வயதிற்கு கீழ் உள்ளோர் பிரிவில் கலந்து கொண்டு விளையாடி 2 தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவி பூமிதாைவ நேற்று தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் கவுரி பள்ளிக்கு நேரில் வந்து பாராட்டினார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்