கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை - 7 பேர் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-08-18 16:26 GMT

போச்சம்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (32). இவர் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். இவர் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்றுனராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அம்மாணவி தன் பெற்றோரிடம் அழுதவாறு கூற, அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் சிவராமன் மீது கந்திக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் சிவராமன் மீது போக்சோ பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக உள்ள சிவராமனை போலீசார் தேடி வருகிறார்கள். இதனிடையே சிவராமனை நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கி கட்சி தலைமை அறிவித்தது.

இந்நிலையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், பயிற்சியாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. என்.சி.சி. பயிற்சியாளரும் முன்னாள் நா.த.க. நிர்வாகியுமான சிவராமனை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்