பென்னாகரம் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை

Update: 2023-08-27 19:30 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்ப தகராறு

பென்னாகரம் அருகே எஸ்.குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் மூர்த்தி. செங்கல் சூளை உரிமையாளர். வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த வெங்கட்ராமன் மகள் சினேகா (வயது 25). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும, ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று காலை மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சினேகாவை அவரது மாமியார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சினேகா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சினேகாவை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சினேகா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து பென்னாகரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சினேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்