தேசியகீத அவமதிப்பு: கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் - திருமாவளவன்

தேசியகீதம் இசைப்பதற்குள் பேரவையிலிருந்து கவர்னர் வெளியேறியது தேசியகீத அவமதிப்புமாகும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

Update: 2023-01-09 09:14 GMT

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை கவர்னர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். அப்போது திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் போன்ற வார்ததைகளை படிக்காமல் புறக்கணித்தார்.

இதற்கு கவர்னர் முன்பே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து பாதியில் புறப்பட்டார்.

இந்த நிலையில் தேசியகீதம் இசைப்பதற்குள் கவர்னர் வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்பு என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

கவர்னரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்.எஸ்.எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் கவர்னர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை.

எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி வரும்13-ம் தேதி வி.சி.க சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

கவர்னரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்