விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா

பாலக்கோடு அரசு மகளிர் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2022-09-14 16:41 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.பி., பேரூராட்சி தலைவர் முரளி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு 379 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

இதில் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, தாசில்தார் ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, வட்டார கல்வி அலுவலர் அன்புவளவன் மற்றும் அதிகாரிகள், ஆசிரிய- ஆசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்