சுதந்திர தின விழா

கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா

Update: 2022-08-15 16:44 GMT

கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி வரவேற்றார். கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன், காந்தி, நேரு, திருப்பூர் குமரன், பகத்சிங், வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து பேசினார். பாரத் கல்வி குழுமத்தின் நிறுவனர் மணி பேசும் போது மாணவ, மாணவிகள் அனைவரும் நமது தேசத்திற்காக, சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேச தலைவர்களை இந்த நாளில் போற்றி பெருமை அடைய வேண்டும் என்று கூறினார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுதந்திர தின விழாவையொட்டி பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்படடு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்திவேல் பரிசுகளை வழங்கினார். முடிவில் பள்ளியின் முதல்வர் ஹரிநாத் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்