கயத்தாறில் அ.தி.மு.க. பொதுக் கூட்டம்

கயத்தாறில் அ.தி.மு.க. பொதுக் கூட்டம் நடந்தது.

Update: 2022-09-18 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா அ.தி.மு.க. பொதுக்கூட்டம் கலையரங்கத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செ.செல்வகுமார் தலைமை தாங்கினார். கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தார். ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் பாலகிருஷ்ணன், கோவில்பட்டி ஒன்றிய துணை தலைவர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்