கனமழை எச்சரிக்கை; கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரியில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

Update: 2023-11-03 12:09 GMT

கன்னியாகுமரி,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் நாளை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை விடப்படுகிறது என்று கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரி அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்