தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்..!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-04-12 08:16 GMT

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

12.04.2023 முதல் 13.04.2023 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

12.04.2023 முதல் 16.04.2023 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்