புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

சங்கரன்கோவில் அருகே, விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-09-19 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே, விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

புதுமாப்பிள்ளை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 28). தொழிலாளி. இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் மாலதி குடும்பத்தகராறு காரணமாக கோபித்துக்கொண்டு தனது தந்தை ஊரான தோணுகால் ஊருக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த புதுமாப்பிள்ளை பால்ராஜ் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார்.

சாவு

அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்