குறை தீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து 22 மனுக்களை பெற்றார். மேலும் அவர்களிடம் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த முகாமில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.